திருமாலுக்குச் சக்கரம் தந்த சிவபெருமான்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே. – (திருமந்திரம் – 367)

விளக்கம்:
திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் நம் சிவபெருமான், பூமி முதலிய ஏழு உலகங்களைப் படைத்தான். அவற்றை நிலை நிறுத்தும் பொருட்டு திருமாலுக்குச் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலகில் உள்ள தீயவர்கள் அகங்காரத்தோடு தீச்செயல்களைச் செய்தால், திருமால் தனது சக்கராயுதத்தால் அவர்களை அழித்து, இவ்வுலகைக் காப்பான்.

error: Content is protected !!