முதல்வன்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
என் அப்பனை, நந்தியை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, ஒப்பு இல்லாத வள்ளலை, இந்த உலகின் முதல்வனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபடுவோம். அப்படி வணங்கினால் அந்த ஈசனின் அருளைப் பரிசாக பெறலாம்.

Oh my Divine Father, Nandi, the unsurfeiting nectar!
Bounteous One, not Comparable, Head of this World!
We shall Praise him ever,
By praising, we’ll get reward of His Grace.

Leave a Reply

error: Content is protected !!