கற்க வேண்டிய உண்மையான கல்வி!

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. – (திருமந்திரம் – 290)

விளக்கம்:
மனம் ஒருமைப் படும் விதம் அறிந்தேன்.  இணைந்திருக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவை அறிந்தேன். உள்ளத்தினுள் புகுந்த தேவர்பிரான் சிவபெருமானை மறுக்காமல் ஏற்க கற்றேன். உவர்ப்பு ஏற்படுத்தாத இந்த வகையான கல்வியை நிறைய கற்றேன்.

மனத்தை ஒருமைப் படுத்தலும்  உடல், உயிருக்கு இடையேயான உறவை அறிந்து கொள்ளுதலும், கற்க வேண்டிய முக்கிய  கல்வியாகும்.

(குறிப்பு – மன ஒருமை, செறிப்பு – உறவு, கறிப்பு – உவர்ப்பு)

Leave a Reply

error: Content is protected !!