வழித்துணையாய் வரும் கல்வி

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. – (திருமந்திரம் –297)

விளக்கம்:
கல்வி கற்றவர்களின் சிந்தனை நமக்கெல்லாம் வழித்துணையாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி அறியாமையை விளைவிக்கும். அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். கல்வி கற்றவர்களுக்கு, அந்த தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் விளங்கும் அந்த சிவபெருமான்  பெருந்தன்மையுடன் அருள் புரிவான்.

Leave a Reply

error: Content is protected !!