முப்புரம் அழித்த இடம் – திருவதிகை

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. – (திருமந்திரம் – 343)

விளக்கம்:
செம்மை நிறம் கொண்ட தனது சடையில் கங்கை நீரை அணிந்துள்ள  சிவபெருமான் மிகப் பழமையான முதல் கடவுள் ஆவான். அவன் முப்புரமான மூன்று ஊர்களை அழித்தான் என்று சொல்பவர்கள் மூடர்கள். முப்புரம் என்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை ஆகும்.  சிவபெருமான் அழித்தது அந்த மும்மலங்களை என்பதை யார் அறிவார்?

அப்பணி – அப்பு + அணி,   புராதனன் – பழமையானவன்

Leave a Reply

error: Content is protected !!