எல்லாவற்றிலும் புகுந்திருக்கிறான்!

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. – (திருமந்திரம் – 397)

விளக்கம்:
உலகத்துக்கு எல்லாம் தலைவனான உருத்திரனின் செயல்களில் எல்லாம் நம் சிவபெருமான் புகுந்திருக்கிறான். கையில் சக்கரத்தை வைத்துள்ள திருமாலின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். அவன் இல்லாத செயல் என்று எதுவுமே இல்லை என்பதால் அவனே எல்லோருக்கும் தலைவனாகிறான்.

Leave a Reply

error: Content is protected !!