அறிவுக்கு அறிவாய் விளங்குபவன்!

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. – (திருமந்திரம் – 411)

விளக்கம்:
இன்பம், துன்பம் ஆகிய இரு வேறுபட்ட நிலைகளால் ஆனது தான் நம் வாழ்க்கை. இது போன்ற எல்லாவிதமான இரு வேறுபட்ட நிலைகளிலிலும் சிவபெருமான் இருக்கிறான். விடியலாகவும் இருக்கிறான், அவனே இருளாகவும் இருக்கிறான். அவன் புகழிலும் இருக்கிறான், இகழிலும் இருக்கிறான். அவன் நம் உடலில் புகுந்திருக்கிறான். நம் உயிராக இருக்கிறான். நம் அறிவினில் நிரந்தரமாகக் கலந்திருக்கிறான்.

Leave a Reply

error: Content is protected !!