யோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.   – (திருமந்திரம் – 419)

விளக்கம்:
நமது உடலுக்கு உயிரைத் தாங்கும் தன்மையைத் தருபவன் சிவபெருமான். வாழும் காலம் முடிந்து உயிர் உடலை விட்டுப் பிரியும் போதும், நம் உயிருக்கு அவன் ஒருவனே துணையாவான். ஏழு பிறவிகளிலும் அச்சிவபெருமானை நாம்  யோக வழியில் நின்று காணலாம். நம்மை யோக வழியில் நிலையாக நிற்கச் செய்பவனும், கொன்றை மாலையை அணிந்துள்ள நம் சிவபெருமான் தான்.

Leave a Reply

error: Content is protected !!