உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் …

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுயிது வாமே.   – (திருமந்திரம் – 443)

விளக்கம்:
குயவன் தான் செய்யும் பாத்திரங்களை எல்லாம் ஒரே மாதிரி செய்வதில்லை. சக்கரத்தில் ஏற்றும் மண்ணைக் குயவன் தன் மனம் போனபடி விதவிதமான வடிவங்களில் பாத்திரமாகச் செய்வான்.  விதவிதமானப் பாத்திரங்களை அவன் செய்தாலும், சக்கரத்தின் இயக்கம் ஒன்று போலவே இருக்கும். அது போலவே, நம் தலைவனான சிவபெருமான் விதவிதமான உயிர்களைப் படைத்தாலும், குயவனின் சக்கரம் போல் இந்த உலகம் இயங்கும் விதம் நிலையானதாக இருக்கும்.

1 thought on “உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் …

Leave a Reply

error: Content is protected !!