விந்து பாயும் தூரம்!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.  – (திருமந்திரம் – 464)

விளக்கம்:
ஆண் பெண் கூட்டுறவின் போது, சுக்கில நாடியில் தோன்றும் விந்துவும், யோனியிலிருந்து தோன்றும் சுரோணிதமும் தாம் புறப்படுகிற இடத்தில் எட்டு விரல் அளவு பாயும். பாய்ந்து தனது துணையின் உடலுக்குள் நான்கு விரல் அளவு பாயும். அதன் விளைவாக புதிதாக ஒரு உயிர் தோன்றி பிறகு எண்சான் உடலாக வளருகிறது.

Leave a Reply

error: Content is protected !!