கருவுக்கு உரு கொடுத்தவன்!

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 471)

விளக்கம்:
அனைத்து வேதங்களிலும் இருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தைப் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதையே! அழிவில்லாத பெரும் சுடராகிய அவன், இந்த உலகின் முதல் படைப்பாளி ஆவான். ஆண் பெண் கூட்டுறவின் போது சேரும் விந்து மற்றும் சுரோணிதத்திலிருந்து கருவை உருவாக்குபவன் அவனே! உருவான கருவுக்கு உருவம் கொடுத்து நல்லதொரு உடலை உருவாக்குபவனும் அவனே!

Leave a Reply

error: Content is protected !!