ஆலம் கடந்த சிவபெருமானை நினைப்போம்

நாலும் கடந்தது நால்வரும் நால்அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்றுஆர் ஆரறிவாரே – 745

விளக்கம்:
இதுவும் காலச்சக்கரம் பற்றிய பாடல். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது, நாம் அதை உணர்ந்து யோக வழியில் செல்லாமல், இன்னும் நிறைய காலம் மீதம் இருப்பதாக நினைத்து காலம் கடத்துகிறோம்.

நான்கு வயதைக் கடந்தோம், அதைச் சிறு வயது என்று விட்டு விடலாம். பாலன் எனச் சொல்லப்படும் பத்துப் பதினைந்து வயதைக் கடந்தோம், அப்போதும் நாம் யோகத்தைத் தொடங்கவில்லை. அழகிய கோலம் கொண்ட இளமைக் காலத்தையும் கடந்து விட்டோம், இன்னும் நாம் ஆலம் கடந்த அந்த சிவபெருமானை உணர்ந்து அறியவில்லை.

Leave a Reply

error: Content is protected !!