பொறாமை என்னும் பல்லி

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. –  (திருமந்திரம் – 539)

விளக்கம்:
பொறாமையைப் பற்றி நிற்பவர்கள் நெஞ்சில் பல்லி ஒன்றுண்டு. பொறாமை கொண்டவர்களால் தன்னைச் சுற்றி உள்ள நல்ல விஷயங்களைக் கவனிக்க முடியாது. நல்ல சுவையையும் நறுமணத்தையும் கூட நுகர முடியாதபடி  அவர்களது மனத்தில் உள்ள பல்லி நாவையும் மூக்கையும் கட்டிப்போடுகிறது. இப்படித் தடைப்பட்டு சிதைகின்ற மனத்தை செழுமைப்படுத்துவது வற்றாத பொறுமையே!

error: Content is protected !!