திருமூலரின் அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.   – (திருமந்திரம் – 96)

விளக்கம்:
சிவபெருமானின் புகழ் பாடுபவர் வழியிலே சென்று அவர்களைப் போல் பாடும் வழியை அறியாமல் உள்ளேன். பக்தியினாலே அவர்கள் ஆடுவதைப் போல நான் ஆடவில்லை. யோகத்தினால் இறைவனை நாடுபவர் வழியில் சென்று நாடும் வழியை அறியாமல் உள்ளேன். ஞானம் தேடுபவர் வழியில் சென்று ஞானம் அடையும் வழியும் அறியாமல் உள்ளேன்.

“எனக்கென்ன தகுதி இருக்கிறது சிவபெருமானின் புகழ் பாடுவதற்கு?” என திருமூலர் அவையடக்கத்தோடு கேட்கிறார்.

Leave a Reply

error: Content is protected !!