குற்றமில்லாத அந்தணர் யார்?

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.  – (திருமந்திரம் – 227)

விளக்கம்:
குற்றமில்லாத அந்தணர் யார் தெரியமா? அவர்கள் தலை சிறந்த நெறியான பிரணவத்தை ஆராய்ந்து அறிந்து, தம் குருவிடமிருந்து நான்கு வேதங்களுக்கும் பொருள் அறிந்து கொள்வார்கள். அந்த வேதங்களில் சொல்லப்பட்ட திருநெறிப்படி நடந்து, சிவத்தின் உண்மை சொரூபத்தை சிறிய துகளில் கூட பார்ப்பார்கள்.

Leave a Reply

error: Content is protected !!