பகைவனிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. – (திருமந்திரம் – 245)

விளக்கம்:
மன்னனால் நல்லமுறையில் காக்கப்படும் நாட்டின் மக்கள் அறவழியிலே நிற்பார்கள். பகை நாட்டு மன்னன் தன் நாட்டைக் கைப்பற்ற வந்தால், தன் மக்களை அவர்களிடம் இருந்து காக்க வேண்டியது அந்நாட்டு மன்னனின் கடமையாகும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னை மட்டும் காத்துக்கொள்ள நினைக்கும் மன்னன், தன் பசிக்காக பிற உயிர்களைக் கொல்லும் புலியைப் போல தீங்கு நிறைந்தவன் ஆவான்.

Leave a Reply

error: Content is protected !!