மதுவிலக்கு பற்றி திருமந்திரம்

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. – (திருமந்திரம் – 246)

விளக்கம்:
நமது மூச்சுக்காற்றைக் கட்டி சுழுமுனை வழியாக ஏறச்செய்து, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி எனும் கனலை மேலே ஏற்றி, நமது நெற்றியில் உள்ள சந்திர மண்டலத்தில் தோன்றும் பால் போன்ற அமிர்தத்தைப் பருகினால் கிடைக்கும் போதையே மேலானது. அதை விட்டு மன மயக்கத்தினால் போதைக்காக மது அருந்தும் உன்மத்தருக்கு தண்டனை அளித்து திருத்த வேண்டியது அந்நாட்டின் மன்னனின் கடமையாகும்.

Leave a Reply

error: Content is protected !!