ஆதிப்பிரான் அவன்!

பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் –303)

விளக்கம்:
சிவனே இந்த உலகில் மூத்தவன் என்பதை உணர்ந்து அவனைப் போற்றிப் புகழ்பவர்கள் சிறப்புடையவர்கள். அவர்கள் தம் வாழ்நாள் முடிந்த பிறகு வானுலகில் தேவர் ஆவார்கள். அரிய தவங்களைச் செய்யும் அந்த ஆதிப்பிரான் தன்னை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு மகிழ்ந்து அருள் செய்வான்.

Leave a Reply

error: Content is protected !!