நம் சிரசில் பரவி இருப்பார் அகத்தியர்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. – (திருமந்திரம் – 338)

விளக்கம்:
நம்முள்ளே குண்டலினி என்னும் அக்னியை உண்டாக்கி வளர்ப்பவர் அகத்தியர். வளரும் அந்த அக்னியை நம்முடைய சிரசில் ஏற்ற உதவுபவர் அகத்தியர். சிரசில் ஏறிய அக்னியை சீராகப் பரவச் செய்பவர் அகத்தியர். அகத்திய முனிவர் நம் சிரசில் எங்கும் ஒளியாகப் பரவி இருக்கிறார்.

Leave a Reply

error: Content is protected !!