திருக்கொறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. – (திருமந்திரம் – 346)

விளக்கம்:
தியானத்தினால் நமது மனத்தை காமத்தின் வழியில் செல்லாது  திருத்தி, சிவனை நினைத்து அவனது நினைவிலேயே இருக்கச் செய்வோம். சிவபெருமான் மன்மதன்  விளைவிக்கும் காமத்தை அழித்து, நம்மை தவயோகத்தில் நிலையாக இருக்கச் செய்யும் இடம் திருக்கொறுக்கை.

சிவபெருமானை வேண்டினால், தியானத்தில் நமக்கு இடையூறாக வரும் மன்மதனை எரித்து அழிப்பான்.

1 thought on “திருக்கொறுக்கை

Leave a Reply

error: Content is protected !!