சக்தியின் தவம்

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.  – (திருமந்திரம் – 347)

விளக்கம்:
மலையரசன் மகளாகப் பிறந்த சக்தியானவள், சிவபெருமானின் திருவடியை அடைவேன் என உறுதி கொண்டாள். அப்பெருமானை நோக்கி உறுதியான தவம் செய்து முறையாக அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த வழிபாட்டை கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.

நமது மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தி, உச்சந்தலையின் இடது பாகத்தில் விளங்குகின்ற சிற்சித்தியைச் சென்று சேர்வதே தவமாகும்.

Leave a Reply

error: Content is protected !!