அகவேள்வி – சிவபெருமானுக்குப் பிடித்த வழி

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே.  – (திருமந்திரம் – 357)

விளக்கம்:
சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து தேவர்கள் அவனை வேண்டினார்கள். ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கலையை சுழுமுனை வழியாக மேலே எழுப்பினார்கள். அப்போது சிவந்த ஒளியான குண்டலினி சக்தி மேலே சகஸ்ரதளத்தில் போய் பற்றிக்கொண்டது. ‘இந்த அகவேள்வி தனக்குப் பிடித்த வழியாயிற்றே!’ என்று மகிழ்ந்த சிவபெருமான் ஓடி வந்து அவர்களுக்கு அருள் செய்தான்.

Leave a Reply

error: Content is protected !!