திருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே. – (திருமந்திரம் – 368)

விளக்கம்:
தான் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு, திருமாலுக்குச் சக்கரத்தை அளித்தான் நம் சிவபெருமான். ஆனால் அந்தச் சக்கரத்தைத் தாங்கும் வலிமை முதலில் திருமாலுக்கு இல்லை. வலிமை வேண்டி திருமாலும் மிகுந்த விருப்பத்துடன் சிவபெருமானை வழிபட, நம் பெருமானும் திருமாலுக்குச் சக்கரத்தைத் தாங்கக்கூடிய வலிமையை அளித்து அருளினான்.

Leave a Reply

error: Content is protected !!