நீளியன்!

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே. – (திருமந்திரம் – 375)

விளக்கம்:
சிவபெருமான் வானம், பூமி முதலிய எல்லா உலகங்களையும் தனக்குள் கொண்டு நீண்டு எழுந்து நின்றான். பேரொளியாக நின்ற அவனது வடிவம் பார்ப்பவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது. பிரமனும், திருமாலும், தங்கள் செருக்கினால், சிவனது திருமுடியையும் திருவடியையும் ஆராயச் சென்றார்கள். அவர்களால் அடி, முடி இரண்டையுமே காண முடியவில்லை.

Leave a Reply

error: Content is protected !!