இடர் நீக்கும் சங்காரம்!

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.   – (திருமந்திரம் – 427)

விளக்கம்:
நித்திய சங்காரம், கருவினால் உருவான நமது உடலின் துயரங்களை நீக்கும். ஆயுட் சங்காரத்தில் உடல், உயிர் ஆகியவற்றின் துயர் நீங்கும். சருவ சங்காரம் இவற்றை எல்லாம் கடந்து சூக்கும உடலின் துயரையும் அழிக்கிறது. துயரங்கள் நீங்கி நாம் உய்யும் பொருட்டே சங்காரம் நடைபெறுகிறது. சங்காரம் என்பது அவனது அருளே ஆகும்.

Leave a Reply

error: Content is protected !!