கங்கைக்கரையில் நின்றால் பாவம் நீங்கும்

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே.   – (திருமந்திரம் – 439)

விளக்கம்:
நாமெல்லாம் உத்தமர்கள் தாம், ஆனால் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றில் மூழ்கியுள்ளோம். அலை மிகுந்த கடலில், கரை அருகிலிருந்தாலும், மூழ்குபவனுக்கு அது தெரிவதில்லை. அது போல் ஆணவம் முதலியவற்றில் மூழ்கியுள்ள நமக்கு கரையேறி சிவன் திருவடியை நாடி இருக்கும் வழி தெரிவதில்லை. நாம் மாயக்கடலில் மூழ்காமல் கங்கைக்கரையில் நிற்பது போல, மாயையில் சிக்காமல் நின்றால் நம் பாவமெல்லாம் நீங்கப் பெறலாம்.

1 thought on “கங்கைக்கரையில் நின்றால் பாவம் நீங்கும்

Leave a Reply

error: Content is protected !!