உயிரை உடலோடு கட்டுவான், பின்பு அவிழ்ப்பான்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.   – (திருமந்திரம் – 441)

விளக்கம்:
எட்டுத்திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்ட வடிவமாய் உள்ள கடல் நீர், அக்னி, நிலம், வானம் ஆகியவற்றைச் சேர்த்து ஐம்பூதங்களால் நம் உயிரையும் உடலையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பவன், நெற்றிக்கண்ணை உடைய நம் சிவபெருமான் ஆவான். கட்டிய உயிரையும் உடலையும் அவிழ்ப்பவனும் அவனே!

Leave a Reply

error: Content is protected !!