ஞானமே வடிவானவன்!

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே.  – (திருமந்திரம் – 449)

விளக்கம்:
சிவபெருமான் நம்முள்ளே ஒளி விடும் சோதியாகவும், நம் உயிருடன் பொருந்தி இருக்கும் உடலாகவும் விளங்குகிறான். விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பும் மேலான பொருளாகவும், இந்த மண்ணுலகில் வாழும் பக்தர்களால் புகழப்படும் திருமேனியனாகவும் அவனே விளங்குகிறான். மிகப்பெரிய ஞான வடிவமாக விளங்குபவன் நம் சிவபெருமான்.

Leave a Reply

error: Content is protected !!