கூடலுக்கு முன்பே கருவின் விதி தீர்மானமாகிறது!

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.  – (திருமந்திரம் – 459)

விளக்கம்:
காமத்தினால் ஆணும் பெண்ணும் கலந்தபோது, பாயும் விந்து, சுரோணிதம் ஆகியவற்றால் கரு உருவாகிறது. கரு உருவாகும் போதே அதில் உயிருக்குத் தேவையான இருபத்தைந்து தத்துவங்களும் சேர்கின்றன. உண்மையில், ஆண் பெண் கூடலின் போது இந்த தத்துவங்கள் சேர்வதில்லை. கூடலுக்கு முன்பே ஆணின் உடலிலும், பெண்ணின் உடலிலும் புதிய உயிருக்கான தத்துவங்கள் உருவாகி விடுகின்றன. புதிய உயிருக்கான எல்லாப் பொருட்களும் தயாராகி விட்ட நிலையில், ஆணும் பெண்ணும் மாயையினால் தூண்டப்பட்டு மனம் ஒருமித்துக் கலக்கிறார்கள்.

Leave a Reply

error: Content is protected !!