இந்த உடல் என்னும் மண்பானை!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.  – (திருமந்திரம் – 468)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.

Leave a Reply

error: Content is protected !!