இயல்பாகவே நமக்கு வேதங்களைப் பிடிக்கும்!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.  – (திருமந்திரம் – 474)

விளக்கம்:
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான், நம்முடைய உடலைப் படைக்கும் போது தானும் அதில் கலந்து விடுகிறான். நம்முடைய ஆன்மா தன்னுடைய தளையில் இருந்து விடுபட வேதங்களைப் படைத்தான். நம்முடைய ஐம்புலன்களும் வேதங்களை விரும்பிக் கற்கும்படியான ஒரு அமைப்பை, நம் உடல் உருவாகும் போதே படைத்திருக்கிறான் அவன். நாம் வேதங்களைக் கற்று உணர்ந்து, நம்முடைய தளைகளில் இருந்து விடுபடுவோம்.

Leave a Reply

error: Content is protected !!