சிவனும் சக்தியும் நமது வளர்ப்புத் தாயார்கள்!

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.  – (திருமந்திரம் – 475)

விளக்கம்:
சிவனும் அன்பும் வேறு வேறு இல்லை. அன்பு இல்லாமல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் அன்பு இல்லை. அப்படி அன்பே வடிவான சிவன் நமக்கு இந்த உயிரைத் தந்திருக்கிறான். சிவனும் சக்தியும் நமக்கு வளர்ப்புத் தாயார்களாக இருந்து நம்மை அன்போடு வளர்க்கிறார்கள்.

Leave a Reply

error: Content is protected !!