தவத்தால் உணரலாம்

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.  – (திருமந்திரம் – 490)

விளக்கம்:
இந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

error: Content is protected !!