சித்தமெல்லாம் சிவனே!

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.  – (திருமந்திரம் – 492)

விளக்கம்:
உயிர்கள் பிறப்பது சிவசக்தியின் திருவிளையாடலால். அவர்கள் இந்த உடலுக்கு உயிர் கொடுத்தவர்கள். சிவசக்தியானவர்கள் அந்த உயிரை சுத்தமும் அசுத்தமும் ஆகிய இரண்டு மாயைகளில் சிக்கச் செய்து, உயர்ந்த ஒரு யோக நிலையை அடையவும் உதவி செய்கிறார்கள். நாம் பக்குவம் பெற்று அந்த உன்னதமான யோக நிலையை அடையும் போது நம்முடைய மனம் சிவமயமாகி விடும். நமக்கு சிவனைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறெதுவும் இருக்காது.

Leave a Reply

error: Content is protected !!