அஞ்ஞானம் நீங்கப் பெறுவோம்!

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.  – (திருமந்திரம் – 500)

விளக்கம்:
ஆணவத்தால் ஏற்படும் அறியாமையை நீக்குவது நமது கனவாக மட்டும் இருந்து விடக்கூடாது. நனவிலும் ஆணவத்தை விட்டு அறியாமை நீங்கப் பெற வேண்டும். அப்படி அஞ்ஞானம் நீங்கப் பெற்றவர்கள் தாம் விந்து, நாதம் முதலிய சகல தத்துவங்களையும் தெளிவாக உணர்வார்கள். ஆணவம் முதலிய அழுக்குகள் நீங்கப் பெறாத சகலர்கள் நெடுங்காலம் முயற்சி செய்து சிவதத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள்.

Leave a Reply

error: Content is protected !!