தகுதி அறிந்து தானம் செய்ய வேண்டும்

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  – (திருமந்திரம் – 501)

விளக்கம்:
உண்மையான சிவஞானிகளுக்கு எள்ளளவு தானம் செய்தாலும் கிடைக்கும் பலன் அதிகம். சித்தியும், முத்தியும், மேலான இன்பமும் கிடைக்கும். அஞ்ஞானம் அகலாத மூடர்களுக்கு நிலமளவு பொன்னைத் தானம் செய்தாலும் அது எந்தவிதப் பயனையும் தராது. மேலான இறை இன்பமும் கிடைக்காது போய்விடும்.

தகுதி உள்ளவர்க்கே தானம் செய்ய வேண்டும்.

Leave a Reply

error: Content is protected !!