பக்தி, யோகம், ஞானம்

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.  –  (திருமந்திரம் – 510)

விளக்கம்:
கண்ணீர் மல்க பக்தியுடன் சிவனை வழிபடுபவர்க்கு, அவன் குளிர்ச்சியுடைய பொருளாகத் தோன்றுவான். பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு சிவனைக் காணும் வாய்ப்பு அதிகம். தெளிந்த ஞானம் உள்ளவர்களின் சிந்தையில் சிவன் எப்போதும் இருக்கிறான். ஞானம், அன்பு, யோகம் எதுவும் இல்லாமல் புற உலகில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவதால் எந்தப் பயனும் கிடையாது. அவர்களால் சிவனடியை அடைய முடியாது.

Leave a Reply

error: Content is protected !!