கடலில் தொலைத்ததைக் குளத்தினில் தேடலாமா?

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.  –  (திருமந்திரம் – 513)

விளக்கம்:
புனிதமான தீர்த்தத்தை வெளி உலகில் தேடாமல், தியானத்தினால் தம்முள்ளே தேடுபவர்களுக்கு ஒப்பானவர் யாருமில்லை. நந்தியம்பெருமான் நம் உடலில் புகுந்து திடமாக அமர்ந்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் அந்த உண்மையை உணராமல் புனித தீர்த்தத்தை வெளி உலகில் தேடுகிறார்கள். அவர்களது செயல் கடலில் தொலைத்தப் பொருளை குளத்தினில் போய்த் தேடுவதைப் போல் உள்ளது.

Leave a Reply

error: Content is protected !!