உள்ளூறும் கங்கை!

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.  –  (திருமந்திரம் – 512)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவபெருமானை அறிந்தவர்கள், பிறப்பு இறப்பு இல்லாத அமரர் ஆவார்கள். எங்கும் எதிலும் செறிந்திருக்கும் அப்பெருமானின் திருவடியைத் தேடிச்சென்று வெற்றி பெறுவோம். சிவனடியை தியானித்து இருந்தால் நம்முள்ளே கங்கை வெள்ளம் தோன்றுவதை உணரலாம். அவ்வெள்ளத்தை மறிக்காமல், நமது ஐம்பொறிகளும் அவ்வெள்ளத்தில் மூழ்குமாறு செய்வோம். நம்முள்ளே ஊறும் அத்தீர்த்தத்தில் மூழ்கினால் நாம் புண்ணியம் பெறலாம்.

Leave a Reply

error: Content is protected !!