சிவ நிந்தனை கூடாது!

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே.  –  (திருமந்திரம் – 526)

விளக்கம்:
தெளிவான ஞானம் பெற்றவர்கள் சிவனடியை நினைத்து, அதை அடைவதற்கான வழியில் செல்வார்கள். அவர்களது சிந்தையின் உள்ளே சிவபெருமான் வந்தமர்ந்து அருள் செய்வான். சிவபெருமானை சாதாரணமாக நினைத்து, அவனை இகழ்ந்திடும் நீசர்கள் பூனையின் கையில் அகப்பட்டக் கிளி போல துன்பப்பட்டு அழிந்து போவார்கள்.

Leave a Reply

error: Content is protected !!