பிறவிச் சுழலில் நீந்த உதவுவான்!

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.  –  (திருமந்திரம் – 548)

விளக்கம்:
யாரையும் விட  வல்லவன் சிவபெருமான். அவன் நாம் பெறும் ஞானத்தினுள் தோன்றி அருள்வான். அளவில்லாத பெருமை கொண்ட நம் பெருமான் நாம் பிறவிச்சுழலை நீந்திக் கடக்க உதவி செய்வான். நம்மிடம் மட்டில்லாத உரிமை கொண்டுள்ள அவன் நம்முடைய தேடலை உணர்ந்து நெடுங்காலம் நமக்குத் துணையாக இருப்பான். இவையெல்லாம் பெறுவதற்கு முதலில் நாம் ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் பெற நாம் சிறந்த சிவனடியார்களின் துணையைப் பெற வேண்டும்.

Leave a Reply

error: Content is protected !!