தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)

விளக்கம்:
இத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.

Leave a Reply

error: Content is protected !!