தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)

விளக்கம்:
நமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.

Leave a Reply

error: Content is protected !!