கரிமா என்னும் சித்தி அடையும் வழி!

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே. – (திருமந்திரம் – 682)

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நாம் உணரும் பராசக்தி, நம்முள்ளே நீங்காது அமர்ந்தால் ஐம்பூதங்களால் ஏற்படும் துன்பம் நம்மை நெருங்காது. அந்நிலையில் மனம் இன்னும் தியானத்தில் குவியும். ஓராண்டு காலம் இவ்வாறு மனம் குவிந்து பயிற்சி செய்தால் கரிமா என்னும் சித்தி வாய்க்கும். விண்ணிலிருந்து கவனிப்பது போல் நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கலாம்.

Leave a Reply

error: Content is protected !!