சிவபெருமானை வெளியே தேட வேண்டாம்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே – 707

விளக்கம்:
நமது அண்ணலான சிவபெருமானைக் காண்பது மிக எளிது. ஆனால் நாம் பாதங்கள் வலிக்கும் அளவுக்கு அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்து எங்கெங்கொ சென்று சிவபெருமானைத் தேடுகிறோம். அண்ணல் மேல் கொண்ட அன்பினால், பக்தியினால் நாம் யோக வழியில் தொடர்ந்து நின்று தியானித்தால், நமக்குள்ளேயே குடியிருக்கும் சிவபெருமானைக் காணலாம்.

ஓதம் ஒலிக்கும் உலகு – கடல் சூழ்ந்த உலகம்.

Leave a Reply

error: Content is protected !!