சிவசக்தியின் திருவடிகளைக் காணலாம்

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே – 708

விளக்கம்:
மூலாதாரத்துக்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் பிரமனும், மணிப்பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும் வீற்றிருக்கிரார்கள். மகேசுரனின் வழிகாட்டுதல்படி அநாகதத்துக்கு மேலே தலை உச்சி வரை சிவ ஒளியையும், சிவநாதத்தையும் உணரலாம். தொடர்ந்து இவ்வாறு தியானத்து வந்தால் சிவசக்தியரின் திருவடிகளைக் காணும் பேறு கிடைக்கும். அந்நிலையில் தனிப்பட்ட அருள் ஒளியைக் காணலாம், அருள் ஒலியைக் கேட்கலாம்.

Leave a Reply

error: Content is protected !!