மெய்யடியார்க்கு வழிகாட்டும் சிவன்

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே – 710

விளக்கம்:
பிராணாயாமத்தில் இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுப்பயிற்சி செய்து சுழுமுனையில் மனம் குவிந்து ஆதாரச் சக்கரங்களில் வீற்றிருக்கும் பிரமன், திருமால் முதலான கடவுள்களைத் தியானித்து வழிபடுவோம். அப்படி முறைப்படி தொடர்ந்து யோகம் செய்கின்ற மெய்யடியார்களுக்கு, நம்முடைய சிவபெருமான் வீடுபேறு அடையும் வழியைக் காட்டி அருள்வான்.

Leave a Reply

error: Content is protected !!