சலனம் இல்லாத மனநிலையை அடையலாம்

நண்ணும் சிறுவிரல் நாண்ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்புஇடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே – 750

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் சிறு விரல்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப் போல நமது மார்பில் பெயராமல் ஒத்து இயங்கும். அப்படி ஒருமை பெற்றால் அம்மூன்று நாடிகளும் சகசிரதளத்தில் கூடி நின்றிடும். அப்படி ஒரு நிலை வாய்க்கக் பெறும்போது, ஓவியம் போல் எந்தவித சலனமும் இல்லாத மனநிலையை அடையலாம்.

Leave a Reply

error: Content is protected !!