சுழுமுனையில் சிவன் நிற்கிறான்

சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காண வல்லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனும் ஆமே – 754

விளக்கம்:
காலச்சக்கரம் என்பது ஒரு சுழல்கின்ற ஆறு ஆகும். அந்த ஆற்றுச் சுழலில் சிக்கித் தவிக்காமல் தப்பிக்க நமக்கு இருக்கும் ஒரே துணை சிவபெருமானின் திருவடியாகும். நெருப்பில் அழியப் போகும் இந்த உடலின் மீது பற்று கொள்ளாமல், யோக வழியில் நின்று சிவன் திருவடியைக் காணும் வழியைத் தெரிந்து கொள்வோம். யோகத்தின் போது சுழுமுனையில் கவனம் செலுத்தினால், அந்தத் தண்டினில் கூத்தனாகிய சிவபெருமான் இருப்பதை உணரலாம்.

Leave a Reply

error: Content is protected !!