என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருள்

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே – 762

விளக்கம்:
உயர்ந்த ஒரு இடத்தில் இருந்து கீழே பார்க்கும் போது, காணும் காட்சி எல்லாம் சிறிதாக, சாதாரணமாகத் தோன்றும். அதுபோல யோகநிலையில், உயர்ந்த ஒரு இடத்திற்குப் போகும் போது, கால வெள்ளத்தில் எந்தப் பொருளும், எந்த விஷயமும் தங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாமே கணப்பொழுதில் கடந்து விடுகிறது, ஆனால் அவற்றில் நமது மனம் சிக்கித் தவிக்கிறது. மனத்தை உள்முகமாகத் திருப்பி, கருத்து ஊன்றி தொடர்ந்து தியானித்து வந்தால், நமது மனத்தைக் கால வெள்ளத்தில் சிக்காமல் காக்கலாம். என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருளான சிவபெருமானைக் காணலாம்.

Leave a Reply

error: Content is protected !!